- Advertisement -spot_img

TAG

nityananda prabhu

நிதாஇ குண மணி

பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரிக்கும்போது எப்போதும் அவருடன் பகவான் பலராமரும் அவதரிப்பது வழக்கம். அதன்படி, அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக பக்தரின் வடிவில் அவதரித்தபோது பகவான் பலராமரும் பக்தரின் வடிவில் ஸ்ரீ நித்யானந்த பிரபுவாகத் தோன்றினார். கருணையின் அவதாரமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காட்டிலும் ஸ்ரீ நித்யானந்த பிரபு அதிக கருணை வாய்ந்தவராகத் திகழ்ந்து, கலி யுகத்தின் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களை விடுவிக்கின்றார். நித்யானந்த பிரபுவின் அவதாரத் திருநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவரைப் புகழ்ந்து லோசன தாஸ தாகூர் எழுதியுள்ள பல்வேறு பாடல்களிலிருந்து ஒரு பாடலை பகவத் தரிசன வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

ஏகசக்ரா

இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும் திருத்தலம். ஆதி குருவான பலராமர் கலி யுகத்தில், 1474இல் நித்யானந்த பிரபுவாக அவதரித்த இத்திருத்தலத்தை தற்போது பீர்சந்திரபூர் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. மஹாபாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏகசக்ரா என்றவுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வனவாசத்தின்போது பகாசுரன் என்னும் அசுரனை கொன்றது நினைவுக்கு வரும். குருக்ஷேத்திரப் போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மரை கொல்வதற்கு தேரின் சக்கரத்தை கையிலேந்தி பிறகு அந்த சக்கரத்தை வீசி எறிந்தபோது, அந்த ஒரு சக்கரம் விழுந்த இடமே ஏகசக்ரா என்று பெயரிடப்பட்டது. ஏகசக்ராவில் அமைந்துள்ள திருத்தலங்களை அறிவதற்கு முன் நித்யானந்த பிரபுவின் தெய்வீக தன்மையையும் லீலைகளையும் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம்.

Latest news

- Advertisement -spot_img