ஒருமுறை பிரபுபாதர் கண்களை மூடிக் கொண்டு நன்றாக சாய்ந்தபடி இலகுவாக அமர்ந்தபடி, மாயாவாதக் கொள்கையைப் பற்றி பேசத் தொடங்கினார். அதன் தத்துவ அறிஞர்கள், “நான் கடவுள், நீ கடவுள், நாம் அனைவரும் கடவுள்,” என்று கூறுவதை விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களுடைய பல்வேறு அபத்தங்களை எடுத்துரைத்து கண்டித்தபடி, இரண்டு தவளைகளின் கதை ஒன்றினைக் கூறினார்.
இலக்கினை அறியாத ஆன்மீகப் பயிற்சியா?
பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அருவவாத தன்மை கொண்ட ரோஸிகுருசியன் திருச்சபையின் அதிகாரியான திரு பேல்ஃபியோரி என்பவருக்கும் இடையிலான கலந்துரையாடல்.
பேல்ஃபியோரி: தங்களைப் போன்று கிழக்கு...
—கிஷோரி தாஸியின் பேட்டியிலிருந்து
குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம் பல விஷயங்களைக் கூறியுள்ளார். அவர் கூறிய வேத வழிமுறை, வைஷ்ணவ முறை என்பது எங்களது கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக...
ஸ்ரீல பிரபுபாதர் மும்பையில் இருந்தபோது, பக்தர்களால் அவரை எளிதில் அணுகி, தங்களது கேள்விகளை எழுப்ப முடிந்தது. இருப்பினும், இயக்கம் வளரவளர தமது ஆன்மீக குருவுடன் இது போன்ற நெருங்கிய உறவுகள் கிட்டுமா என்பதில் பஞ்சத்ராவிட ஸ்வாமிக்கு ஐயம் ஏற்பட்டது. அதனை ஸ்ரீல பிரபுபாதரிடமே கேள்வி எழுப்பி விடலாம் என்று எண்ணி, ஒருநாள் அவர் ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்குச் சென்றார்.
இந்திய மக்கள் குறைந்தபட்சம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைகளாக அடக்கி ஆளப்பட்டதன் காரணத்தினால், அவர்கள் தங்களது கலாச்சாரத்தை இழந்து விட்டனர். ஏழ்மையினால் பாதிக்கப்பட்டிருப்பதால், எந்த வழியிலாவது பணம் கிடைக்குமா என்பதிலேயே அவர்கள் குறியாக உள்ளனர். பகவத் கீதையில், போகைஸ்வர்ய ப்ரஸக்தானாம் தயாபஹ்ருத-சேதஸாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, பௌதிகப் புலனின்பத்தில் அதிகமாகப் பற்றுதல் கொண்டிருக்கும் மக்களால் கிருஷ்ண உணர்வைப் புரிந்துகொள்ள முடியாது