- Advertisement -spot_img

TAG

srila prabhupada

குரங்கின் சாமர்த்தியம்

விருந்தாவனத்திற்கு ஸ்ரீல பிரபுபாதர் விஜயம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில், தமது வரவேற்பு அறையில் உபன்யாசம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம், குரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை நோக்கி பாய்ந்தது. உடனே, விஷாகா தாஸி ஒரு துணியை வீசி பெரும்பாலான வாழைப்பழங்களை குரங்கிடமிருந்து மீட்டாள். இருப்பினும், குரங்கு சில பழங்களை எடுத்துச் சென்று விட்டது.

உடல் நலனுக்கு அப்பாற்பட்ட கிருஷ்ண சேவை

இரவு மணி 9:30. விருந்தாவனத்தில் கோடை கால இரவு வேளையில், ஸ்ரீல பிரபுபாதர் என்னை அவரது அறைக்கு அழைத்து சில சேவைகளை வழங்கிய பின்னர் கூறினார், “நீங்கள் இப்போது ஓய்வெடுக்கச் செல்லலாம்.” அதனைத் தொடர்ந்து, ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்கு முன்பாக நான் எனது பாய், கொசு வலை முதலியவற்றை தயார் செய்ய பதினைந்து நிமிடம் ஆயிற்று. சுமார் பத்து மணி இருக்கும். பிரபுபாதருடைய அறையிலிருந்து சப்தம் கேட்டது.

விஞ்ஞானிகளால் மரணத்தைத் தடுக்க இயலுமா?

சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, சூதாடுதல், தகாத பாலுறவு கொள்ளுதல், மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் முதலிய பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களை அசுரர்கள் என்று வேதங்கள் வரையறுக்கின்றன. நாம் இவ்வாறு எடுத்துரைப்பதைக் கேட்கும் மக்கள் தங்களை அசுரர்களாக அறிகின்றனர். இதனால் அவர்களது மனம் புண்படுகின்றது.

கோல்கத்தா

கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தின் அச்சாணியாக திகழ்ந்த கெளடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் இவ்வுலகில் தோன்றுவதற்கும் இறுதியாக கிருஷ்ணரின் நித்திய லீலையில் மீண்டும் நுழைவதற்கும் கோல்கத்தா நகரையே தேர்ந்தெடுத்தார். ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு கோல்கத்தாவையே தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்யும்படி நித்யானந்த பிரபுவிடம் கட்டளையிட்டபோது, நித்யானந்த பிரபு கோல்கத்தாவை மையமாக வைத்தே செயல்பட்டார். நித்யானந்த பிரபு கோல்கத்தாவிற்கு அருகிலிருக்கும் கர்தஹா என்னுமிடத்தில் இல்லத்தை ஏற்படுத்தி முழு வீச்சில் தீவிரமாக கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சைதன்ய மஹாபிரபு இன்றைய கோல்கத்தா நகருக்கு அருகில் வசித்த பாகவத ஆச்சாரியரிடமிருந்து தொடர்ச்சியாக ஏழு நாள் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாட்டு வடிவில் கேட்டதால், கெளடீய வைஷ்ணவர்கள் இவ்விடத்தை குப்த விருந்தாவனம் என்றும் போற்றுகின்றனர்.

போலி கடவுள்களிடம் ஏமாறாதீர்!

ஸ்ரீல பிரபுபாதர்: எங்கெல்லாம் எனது புத்தகங்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் நமது இயக்கத்திற்கு வெற்றி நிச்சயம். மக்கள் அறியாமையில் உள்ளனர்; தற்காலிகமான ஜடவுடலே எல்லாம் என்று கருதுகின்றனர். நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. ஆனால் இந்த புத்தகங்கள் வேதங்களில் வழங்கப்பட்டுள்ள ஆத்ம விஞ்ஞானத்தை நமது ஆன்மீகத் தன்மை மற்றும் நித்திய வாழ்வைப் பற்றிய அறிவைத் தரவல்லவை.

Latest news

- Advertisement -spot_img