AUTHOR NAME

Sridhara Srinivasa Dasa

14 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.

கிருஷ்ணரின் விசேஷ வைபவங்கள்

பௌதிக உலகில் எப்போதெல்லாம் தர்மம் சீர்குலைந்து அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ அப்போதெல்லாம் தாம் அவதரிப்பதாக பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகின்றார். அவதாரம் என்பது பகவான் தமது சொந்த உருவில் ஆன்மீக உலகிலிருந்து இறங்கி வருவதைக் குறிக்கின்றது. அவ்வாறு அவர் வரும்போது, மனித உருவம், விலங்கு உருவம், பாதி மனித பாதி விலங்கு உருவம் (இராம, வராஹ, நரசிம்ம) என பல்வேறு ரூபங்களில் தோன்றுகிறார், இந்த ரூபங்கள் சாதாரண பௌதிகத் தோற்றங்கள் அல்ல; மாறாக, இவர்கள் அனைவருமே பூரண ஞானத்தையும் பூரண ஆனந்தத்தையும் நித்தியமாகப் பெற்றவர்கள் (ஸச்-சித்-ஆனந்த). பகவானின் அவதாரங்கள் எண்ணில் அடங்காதவை என ஸ்ரீமத் பாகவதம் கூறுகின்றது. அவரது வைபவங்களும் கணக்கிட முடியாதவை.

ராக்கெட்டுகளில் ஸ்வர்கம் செல்ல முடியுமா?

தற்சமயம் பூமியில் குடிநீர், உணவு தானியங்களை விளைவிப்பதற்கான செழிப்பான நிலம், வசிக்கும் இடம், தூய்மையான காற்று, கச்சா எண்ணெய் முதலிய இயற்கை வளங்களின் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிற கிரகங்களுக்கு குடிபெயர்வதன் மூலம் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் அதற்கான தீவிர ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இம்முயற்சியில் சிறிதளவு முன்னேற்றம் கிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முயற்சியில் அவர்களுக்கு முழு வெற்றி கிட்டும் என்பது நிச்சயமல்ல.

அமிர்தம் பருக வாரீர்!

பகவான் ஸ்ரீ சைதன்யரின் அவதாரம், அவரது போதனைகள், பக்தர்களுடன் அவர் புரிந்த லீலைகள் முதலியவற்றை அதிகாரபூர்வமான வேத சாஸ்திர பிரமாணங்களோடு வழங்கும் உன்னதப் படைப்பே ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் தலைப்பிற்கு அமரத்துவத்தில் உயிர்சக்தியின் இயல்புகள்” என்று ஸ்ரீல பிரபுபாதர் பொருள் கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் பக்த ரூபத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து அனைத்து ஜீவராசிகளுடனும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் புரிந்து யுக தர்மத்தை நிலைநாட்டினார்.

பிரபுபாதரின் புத்தகங்களை அனைவருக்கும் கொடுங்கள்

நோயாளி ஒருவன் மருத்துவரிடம் சென்று தனது உடலின் நோயை குணப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளான், அதில் கவனக் குறைவாக இருப்பது தனது உடலைப் பாதிக்கும் என்பதை அவன் நன்கு அறிந்துள்ளான். ஆனால் அதே வேளையில் உடலுக்குள் கட்டுண்டு கிடப்பதே தன்னுடைய (ஆத்மாவின்) உண்மையான நோய் என்பதையும் அதை குணப்படுத்துவதற்கான மருத்துவத்தை அறியாதவனாகவும் அவன் உள்ளான். ஆத்மாவைப் பற்றிய உயர்ந்த அறிவு, சிந்தனைகள், மன நிம்மதி உள்ளிட்ட பூரண ஞானத்தையும் பக்தியையும் அளிக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் விலை மதிப்பற்றவை.

சாட்சி கோபால் : திருமணத் தரகரான பகவான்

சைதன்ய மஹாபிரபு விஜயம் செய்த திருத்தலங்களுள் முக்கியமான ஒன்று சாட்சி கோபால் என்னும் அற்புத திருத்தலம். உத்கல தேசம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் (இன்றைய ஒடிஸா மாநிலத்தில்), ஜகந்நாத புரி க்ஷேத்திரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் சத்தியவதி என்ற கிராமத்தில் சாட்சி கோபாலரின் திருக்கோயில் அமைந்துள்ளது.

Latest