AUTHOR NAME

Sri Giridhari Das

119 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

கார்த்திக் மாதமும் தாமோதர பூஜையும்

கார்த்திக் மாத பூஜையில் மிகவும் முக்கியமானது என்னவெனில், பகவான் கிருஷ்ணரை தாமோதரரின் வடிவில், அதாவது அவரது வயிற்றை கயிற்றின் மூலம் உரலுடன் கட்டப்பட்ட வடிவில் வழிபடுவதாகும். இந்த வழிபாட்டினை விருந்தாவனத்தில் செய்வது சாலச் சிறந்தது என்றாலும், ஒவ்வொருவரும் அவரவரது வீட்டில் மாலைப் பொழுதில் இவ்வழிபாட்டினை எளிமையாக சிறப்புடன் செய்யலாம். உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணரின் படம் இஸ்கான் கோவில்களில் கிடைக்கும் (கோவிலுக்குச் செல்ல இயலாதோர் இப்பத்திரிகையின் அட்டைப்படத்தைக்கூட உபயோகிக்கலாம்). அப்படத்தை தாமோதர மாதம் முழுவதும் உங்களது பூஜையறையில் வைத்து பூஜிக்கவும். தினசரி மாலை வேளையில், இக்கட்டுரையுடன் வழங்கப்பட்டுள்ள தாமோதராஷ்டகம் என்னும் பாடலைப் பாடியபடி, மண் விளக்கில் நெய் கொண்டு தாமோதரருக்கு ஆரத்தி செய்ய வேண்டும். அனுஷ்டிக்க வேண்டிய இதர வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பிறப்பற்றவரின் பிறப்பு

எல்லாத் தோற்றங்களுக்கும் மூலமாக விளங்கும் இறைவன், மனிதர்களுக்கு மத்தியில் தோன்றும்போது அது குழப்பக்கூடியதாக இருப்பதால், அவரது பிறப்பு குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு இப்பூவுலகில் பிறந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத் திருநாளை நாம் கொண்டாடி வரும் இத்தருணத்தில், அந்த பிறப்பற்ற இறைவனின் பிறப்பு குறித்த விவரங்கள், இதோ இங்கே…

தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும்

தொன்றுதொட்டு சீரும் சிறப்புமாகத் திகழும் நம் தமிழ் மொழி, செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்று அதனைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கலைஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் என பற்பல சான்றோர்களைப் பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் போற்றிப் புகழும் இத்தருணத்தில், செம்மொழியான தமிழ் மொழி மெல்லமெல்ல கரைந்து வருவது எவராலும் மறுக்க முடியாத கசப்பான உண்மை. கடையேழு வள்ளல்களைக் கண்ட தமிழ்த்தாய், தற்போது ஈகைத் தன்மையே இல்லாதவர்களைக் காண்கிறாள். கண்ணகியையும் கோப்பெருந்தேவியையும் கண்ட தமிழ்த்தாய், தற்போது கற்பற்ற மங்கையர்கள் பாராட்டப்படுவதைக் கேட்கிறாள். இனிமையான பக்திப் பாடல்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்த்தாய், தற்போது கொச்சையான ஆபாசமான பாடல்களால் சிதறடிக்கப்படுகிறாள். ஏன் இந்த சீர்கேடு? இந்த சீர்கெட்ட நிலை குறித்து சற்று அலசிப் பார்ப்போம்.

யாருக்குச் சொந்தம்?

அரசியல் காரணங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தோமெனில், ஓர் இடத்தில் பிறந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்த பல்வேறு நபர்கள், அந்த நகரத்தில் உள்ள வேலைவாய்ப்புகளையும் வசதிகளையும் பறித்துக் கொள்ள, அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் வசதிகளும் குறைந்துவிட்டன என்பதே இப்பிரச்சனையின் அடிப்படைக் காரணமாகத் தோன்றுகின்றது. பல்வேறு மக்கள் இடம் பெயர்ந்ததற்கு என்ன காரணம்?

Latest