கிருஷ்ணரைப் பற்றி வர்ணிக்கையில் சாஸ்திரங்கள் பரம என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகின்றன. பரம என்றால் உன்னதமானவர், ஈடுஇணையற்றவர், உயர்ந்தவர், முதன்மையானவர் என்று பொருள் கூறலாம். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: என்று பிரம்ம சம்ஹிதை கூறுகிறது. அதாவது, கட்டுப்படுத்துபவர்களில் கிருஷ்ணரே பரமன், அவருக்கு ஈடுஇணை யாரும் கிடையாது. மேலும், கிருஷ்ணர் ஈடுஇணையற்ற நபர் (பரம புருஷர்), ஈடுஇணையற்ற புகலிடம் (பரந்தாமர்), ஈடுஇணையற்ற பிரம்மன் (பர பிரம்மன்) என்று பல வழிகளில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.
—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
இப்படியொரு வினோதமான கேள்வியை சமீபத்தில் ஒரு நண்பர் எழுப்பினார். கேட்டவுடன் குபீர் என்று சிரிப்பு வந்தது. ஆயினும், அந்த நண்பர், “குலதெய்வ கோயிலுக்குப் போகாமல் திருப்பதி கோயிலுக்குச் சென்றால்,...
மனிதர்களை மனிதர்களாக வாழ வைக்கும் பொருட்டு, மனித இனத்தின் தந்தையான மனு வழங்கிய வழிகாட்டுதல்களே “மனு ஸ்மிருதி” என்று அறியப்படுகிறது. மனித சமுதாயம் இறையுணர்வைப் பெறுவதற்கு இதுவே அடிப்படை என்று சொல்லலாம். ஆண், பெண், தாய், தந்தை, கணவன், மனைவி, மகன், கற்றறிந்த பிராமணர், ஆட்சியாளர், பிரம்மசாரி, இல்லறத்தவன், சந்நியாசி என எல்லா தரப்பட்ட மக்களின் கடமையையும் மனு ஸ்மிருதி தெள்ளத்தெளிவாக வழங்கியுள்ளது.
“இறைவன் ஒருவனே, இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இறைவனுக்கு உருவம் கிடையாது, இந்து மதத்தில் ஏன் உருவ வழிபாடு? இறைவனுக்கு பிறப்பு கிடையாது, இந்து மதத்தில் ஏன் அவதாரங்கள்? இறைவனுக்கு எந்தத் தேவையும் கிடையாது, நீங்கள் ஏன் அவருக்கு உணவு படைக்கிறீர்?” பதில்களை அறிவீர்!
ஓட்டம், ஓட்டம், ஓட்டம் என்று ஓடும் வாழ்க்கையில், சற்று நின்று யோசித்துப் பார்ப்போம். எதை நோக்கி நாம் ஓடிக் கொண்டுள்ளோம்? வாழ்வில் முன்னோக்கி ஓடுகிறோமா? இல்லை, பின்னோக்கி ஓடுகிறோமா? நூற்றுக்கணக்கான நண்பர்கள் ஃபேஸ்புக்கில் உள்ளனர்; நிஜ வாழ்வில் டஜன் கணக்கில்கூட இல்லை. காதல், அன்பு, பாசம் முதலியவற்றைப் பற்றி நிறைய பேசுகிறோம்; நிஜ வாழ்வில் எத்தனையோ விவாகரத்துகள், எத்தனையோ பங்காளி சண்டைகள் நிகழ்கின்றன.