AUTHOR NAME

Sri Giridhari Das

117 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

எப்படியிருந்த உலகம்…

எப்போது பார்த்தாலும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த உலகம்—நினைத்த இடத்திற்குப் பயணிக்கலாம், நினைத்ததை வாங்கலாம், நினைத்ததைச் செய்யலாம்—ஆனால், தற்போது கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் எதிரி அனைவரையும் கட்டிப்போட்டுள்ளது.

கொரோனா, ஓர் ஆன்மீகப் பார்வை

கொரோனா—எங்கும் பீதி, எல்லாரிடமும் பீதி. உலகச் செய்தித்தாள்கள் எல்லாவற்றிலும் வரலாற்றில் முதல்முறையாக ஒரே செய்தி அடைத்துக் கொண்டுள்ளது. நாடு, மொழி, இனம் என எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் அனைவரும் பேசக்கூடிய ஒரே விஷயமாக கொரோனா திகழ்கிறது. ஆட்சியாளர்கள், எதிர்கட்சிகள், பொருளாதார வல்லுநர்கள், ஜோதிட அறிஞர்கள், மருத்துவர்கள், வியாபாரிகள் முதலியோர் இதுகுறித்து தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

பக்தர்களுக்கு கொரோனா வந்தால்?

கொரோனா என்னும் கொடிய நோய் அனைவரையும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) பாதித்துள்ளது. முக கவசம், சமூக இடைவெளி முதலியவற்றையும் மீறி, துரதிர்ஷ்டவசமாக, நமக்கும் கொரோனா வந்தால், என்ன செய்ய வேண்டும்? அரசாங்கமும் மருத்துவர்களும் வழங்கக்கூடிய சிகிச்சைகளுக்கு பூரண ஒத்துழைப்பு தருவதுடன் இணைந்து, பக்தர்கள் (உண்மையில், எல்லா மக்களும்) கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றினால் நிச்சயம் நன்மை விளையும்.

கலி யுகத்திற்கான மூன்று அவதாரங்கள்

அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக ஒவ்வொரு யுகத்திலும் பகவான் தோன்றுகிறார் என்பதை அனைவரும் அறிவர். அதன்படி, கலி யுகத்திற்கான அவதாரம் கல்கி என்று மட்டுமே மக்கள் அறிவர். ஆயினும், மக்களால் பரவலாக அறியப்படாமல், அதே சமயத்தில் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பதற்காக, கலி யுகத்தில் பகவான் மூன்று அவதாரங்களில் தோன்றியுள்ளார். அந்த மூன்று அவதாரங்களைப் பற்றிக் காண்போம்.

கிருஷ்ண பக்தி தோஷங்களைப் போக்குமா?

கிருஷ்ண பக்தி இயக்கத்திற்குப் புதிதாக வருபவர்கள் எழுப்பும் முக்கிய வினாக்களுள் ஒன்று: “இஸ்கானிற்கு வந்து ‘ஹரே கிருஷ்ண’ ஜபம் செய்தால், எனது தோஷங்கள் போகுமா?” செவ்வாய் தோஷம், சனி தோஷம், மாங்கல்ய தோஷம், ராகு தோஷம், ஸர்ப்ப தோஷம், பித்ரு தோஷம், புத்திர தோஷம் என தோஷங்களுக்கு பஞ்சமே இல்லை. ஒருவனது ஜாதகத்தை அலசி ஆராயும்போது, அவனது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் ஒரு தோஷம் எப்போதும் ஒட்டிக் கொண்டே இருப்பதால், பாமரர் முதல் பண்டிதர் வரை பலரும் பரிகாரத்தைத் தேடி அலைகின்றனர்.

Latest