AUTHOR NAME

Sri Giridhari Das

117 POSTS
0 COMMENTS
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

பாலியல் தொந்தரவுகள் என்ன செய்யலாம்?

பணிபுரியும் இடத்தில் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இதை தைரியமாக வெளியில் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக #MeToo என்ற பெயரில் பல தகவல்கள் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்பு உருவெடுத்த இந்தக் கருத்து புரட்சி இந்தியாவிலும் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. பாலியல் தொந்தரவுகள் அங்கங்கே இருப்பதை அனைவரும் அறிவர். இதனை ஊரறியத் தெரிவிப்பது குற்றத்தைக் குறைக்குமா, வேறு தீர்வுகள் உண்டா, சற்று ஆராய்வோம்.

கிருஷ்ணரின் உள்ளத்தை உருக்குவது எப்படி?

பக்தர்கள் மனம் உருகி பகவானை வழிபட வேண்டும் என்னும் கூற்று பலரும் அறிந்த ஒன்று. இஃது என்ன, பகவானின் மனதை உருக்குதல்? ஆம், இதுவே பக்தி. உண்மையான பக்தியில் பக்தரின் மனம் மட்டுமின்றி பகவானின் மனமும் உருகுகிறது. ஏனெனில், உண்மையான பக்தியில், பக்தன் பகவானின் மீது அன்பு செலுத்துவதைப் போலவே பகவானும் பக்தனின் மீது அன்பு செலுத்துகிறார். அந்த அன்புதான் அவரது மனதையும் உருக வைக்கிறது. கிருஷ்ணரின் மனதை உருக்கும் பக்தியின் குணங்களில் ஒன்று, பணிவு. சரணாகதியின் ஆறு தன்மைகளில் ஒன்றான பணிவினை பக்தன் உண்மையான முறையில் வெளிப்படுத்தும்போது, அது பகவானைக் கவருகிறது, சில சமயங்களில் அவரது உள்ளத்தை உருக்குகிறது.

கோவிந்த நாமம், கேலிக்குரியதா?

“கோவிந்தா, கோவிந்தா…,” “எல்லாம் கோவிந்தாவா?” முதலிய பேச்சுகள் இன்றைய தமிழர்களிடையே தோல்வி, ஏமாற்றம், இழப்பு முதலிய நிகழ்வுகளில் ஒரு வழக்கமாக மாறி விட்டது. “கோவிந்தா” என்ற பெயரைக் கேட்டால், அபசகுனம் என்று பலரும் நினைக்கின்றனர்; ஏதேனும் முக்கிய பணிக்குச் செல்கையில் யாரேனும் “கோவிந்தா” என்று உச்சரித்துவிட்டால், அந்த காரியம் நிறைவேறாமல் போய்விடும் என்று அஞ்சுகின்றனர். கோவிந்த நாமத்தைக் கேலி செய்து எத்தனை எத்தனையோ திரைப்படக் காட்சிகள் வந்துள்ளன. இந்தக் கேலியிலும் அச்சத்திலும் வழக்கத்திலும் ஏதேனும் உண்மை உள்ளதா? சற்று ஆராய்வோம்.

பெட்ரோல் நாகரிகம்

கடந்த 2017 மே மாதத்தில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணரான டோனி சேபா என்பவர் 2025ஆம் ஆண்டிற்குள் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அனைத்து நாடுகளும் நிறுத்தி விடும் என்றும், விரைவில் பெட்ரோல், டீசல் கார்கள் அனைத்தும் குப்பைக்குச் சென்று விடும் என்றும் கருத்து தெரிவித்து உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். இன்றைய உலகப் பொருளாதாரம் கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், பெரும்பாலான ஊடகங்கள் இந்த முக்கிய செய்தியை இருட்டிப்பு செய்து விட்டன.

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்

ஸ்ரீ கிருஷ்ண தாஸ கவிராஜரால் 400 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் வெளியிடப்பட்டு, ஸ்ரீல பிரபுபாதரால் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் மாபெரும் காவியம் தமிழில் தற்போது வெளிவந்துள்ளதால் பக்தர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதை அறிகிறோம். இத்தருணத்தில், இந்த தமிழ் நூல் எவ்வாறு உருவாகியது என்பதுகுறித்த முக்கிய தகவல்களை பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்

Latest