AUTHOR NAME

Vanamali Gopala Dasa

99 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

கீழுலக ஸ்வர்கங்கள்

சூரியனுக்கு கீழே 80,000 மைல் தொலைவில் இராகு கிரகம் உள்ளது. சிம்ஹிகா என்பவரின் மைந்தன் தேவராக இருப்பதற்கும் கிரகத்தின் அதிபதியாக இருப்பதற்கும் முற்றிலும் தகுதியற்றவன் என்றபோதிலும், முழுமுதற் கடவுளின் அருளால் அவன் இராகு கிரகத்திற்கு அதிபதியாக விளங்குகிறான். பகவான் மோஹினி ரூபம் ஏற்று தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கியபோது, இராகு சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே தொந்தரவு செய்து அவர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் தடுத்தான்.சூரியன் மற்றும் சந்திரனுக்கு இராகு இடையூறு செய்யும் காலமே கிரகண காலம் என்று அழைக்கப்படுகிறது.

கிரக நட்சத்திர மண்டலங்களின் வர்ணனை

அனைத்து கிரகங்களின் அரசனாக சூரியன் விளங்குகிறார். அவர் முழுமுதற் கடவுளின் கட்டளைக்கேற்ப மெதுவாகவோ வேகமாகவோ மிதமாகவோ பயணிக்கிறார். தம் கதிர்களின் செல்வாக்கினால் இப்பிரபஞ்சத்தைக் காப்பதோடு அதை முறையாகவும் வைத்திருக்கிறார். அவர் தம் ஒளியால் அனைத்து உயிர்வாழிகளும் காண்பதற்கு உதவுகிறார். சூரிய பகவான் மேஷ ராசி மற்றும் துலா ராசியில் (சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில்) சஞ்சரிக்கும்போது, பகலும் இரவும் சமமாக இருக்கிறது. ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ஐந்து ராசிகளில் (வைகாசி முதல் புரட்டாசி வரை) சஞ்சரிக்கும்போது, ஒவ்வொரு மாதமும் இரவு நேரம் ஒவ்வொரு நாழிகை (24 நிமிடங்கள்) வீதம் குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறாக பகல் நேரம் அதிகரிக்கிறது.

ஜம்புத்வீபத்தின் வர்ணனைகள்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

பல்வேறு வர்ஷங்களில் நிகழும் வழிபாடுகள்

பகவான் விஷ்ணு, பலி மஹாராஜரின் வேள்விச் சாலையில் வாமன தேவராகத் தோன்றி மூன்றடி நிலம் கேட்டு மூவுலகையும் அளப்பதற்காகத் தமது திருவடியைத் தூக்கியபோது, அவரது இடது திருவடியின் பெருவிரல் நகம்பட்டு, பிரபஞ்சத்தின் மேல்பாகம் பிளந்தது. அந்தத் துளை வழியாக காரணக் கடலின் தூய நீரானது கீழிறங்கி கங்கை நதியாக இப்பிரபஞ்சத்திற்குள் வந்தது. ஓராயிரம் வருடங்கள் கீழ்நோக்கிப் பயணித்து, பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த இடத்திலுள்ள துருவ லோகத்தை வந்தடைந்தது.

ஜட பரதரின் வாழ்க்கை

மானின் உடலைத் துறந்த பரத மஹாராஜர் அங்கிரா முனிவரின் குலத்தைச் சேர்ந்த தூய பிராமணரின் குடும்பத்தில் பிறந்தார். பகவானின் கருணையால் அவருக்கு தனது முற்பிறவிகளில் நடந்தவை அனைத்தும் நினைவில் இருந்தன. பக்தரல்லாத தமது உற்றார் உறவினர்களைக் கண்டு எங்கே தான் மீண்டும் வீழ்ந்துவிடுவோமோ என்று அஞ்சினார். அவர்களின் தொடர்பைத் தவிர்ப்பதற்காகவே தன்னை ஓர் உன்மத்தம் பிடித்தவனைப் போன்றும் குருடனைப் போன்றும் செவிடனைப் போன்றும் காட்டிக் கொண்டார். அவர் ஜட பரதர் என்று அழைக்கப்பட்டார். அவரது தந்தை அவருக்கு வேத சாஸ்திரங்களிலும் சடங்குகளிலும் போதிய பயிற்சி அளிக்க விரும்பி அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதிலும், அவை அனைத்திலும் அவர் தோல்வியடைந்தார். சிறிது காலத்திற்குப் பின்னர், ஜட பரதரின் தந்தை மரணமடைந்தார். அவரது தாயாரும் மகனை கணவனது முதல் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு உடன்கட்டை ஏறி தன் கணவன் சென்ற உலகை அடைந்தாள்.

Latest