ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இராமானந்த ராயரிடம் வாழ்வின் இறுதி இலக்கையும் அதனை அடைவதற்கான வழிமுறையையும் கூறுமாறு வினவினார். அதற்கு இராமானந்த ராயர் வர்ணாஷ்ரம முறைப்படி கடமைகளை ஆற்றுவதன் மூலம் ஒவ்வொரு மனிதனும் வெற்றியடைய முடியும் என்று முதலில் பதிலுரைத்தார். மஹாபிரபு அந்த கூற்றினை மேலோட்டமானதாகக் கூறி மறுத்தார். அதைவிட ஆழமாகச் செல்லும்படி வேண்டினார். அதனை ஒப்புக் கொண்ட இராமானந்த ராயர் உழைப்பின் பலனை பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்தல் (கர்மார்ப்பணம்), கர்மம் கலந்த பக்தி (கர்ம மிஸ்ர பக்தி), ஞானம் கலந்த பக்தி (ஞான மிஸ்ர பக்தி), அனைத்தையும் துறந்து கிருஷ்ணரிடம் சரணடைதல் போன்ற கூற்றுக்களை ஒன்றன் பின் ஒன்றாக முன்மொழிந்தார். மஹாபிரபுவோ இவையனைத்தையும் மேலோட்டமானதாகக் கூறி நிராகரித்தார்.
பகவான் கிருஷ்ணர் தமது இராணியருடன் துவாரகையில் வசித்து வந்தார். கிருஷ்ணரது நண்பர் சுதாமர் மனைவி மற்றும் குழைந்தைகளுடன் ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். அவர் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தது.
பிரகலாதர் கர்ப்பத்தினுள் இருந்தபோதிலும், நாரதரின் திவ்யமான உபதேசங்களைக் கேட்பதற்கான அந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொண்டார். கயாதுவின் விருப்பப்படி பிரகலாதர் அவளது வயிற்றிலேயே நீண்ட நெடுங்காலம் தங்கியிருந்தார். ஹிரண்யகசிபு தவத்தை முடித்துக் கொண்டு திரும்பி வந்த பின்னர் கயாது மகனைப் பெற்றெடுத்தாள். பெண்ணாக இருந்த கயாதுவினால் நாரதர் வழங்கிய உபதேசங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஆயினும், நாரதரின் கருணையினால் பிரகலாதர் அவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருந்தார்.
மாணவ சமுதாயம் முழுவதும் எந்த யோசனையுமின்றி ஒரே விதமான கல்வியைத் தொடர்கின்றது. நவீன கல்வியின் மேல் மோகம் கொண்டு பலவித மன உளைச்சல், காழ்ப்புணர்ச்சி மற்றும் தீய பழக்கத்திற்கு அவர்கள் அடிமையாகும் அவலம் ஏற்பட்டுள்ளது. கல்வியாளர்கள் நவீன கல்வி குறித்து பலவிதமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு சமூக ஆர்வலர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று, விவாத மேடைகளில் விவாதித்து நமது கல்வி முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றனர். ஆனால் இவையெல்லாம் எந்த பலனையும் தந்த பாடில்லை. மாணவர்களிடையே இருக்கும் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.