ஏகாதசி, ஹரி-வாஸர என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்நாள், நமது எல்லா புலன்களையும் பகவான் ஹரியின் திருப்திக்காக மட்டுமே ஈடுபடுத்தும் நாள்; ஹரிக்காக மட்டுமே வாழும் நாள்; நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ள அரிய வரப்பிரசாதம். இந்நாளில் ஒவ்வொருவரும் பகவானுக்கும் அவரின் பக்தர்களுக்கும் சேவை செய்வதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இறக்கும் தருவாயில் பகவானின் திருநாமத்தை அஜாமிளன் பெரும் வேதனையுடன் உச்சரித்ததைக் கேட்ட விஷ்ணு தூதர்கள், உடனடியாக அங்குத் தோன்றினர். அவர்கள் பகவான் விஷ்ணுவைப் போலவே தோற்றமளித்தனர், அவர்களது கண்கள் தாமரை மலர்களின் இதழ்களைப் போன்று இருந்தன, தங்கத்தால் மெருகூட்டப்பட்ட மகுடத்தையும் மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்கும் பட்டாடைகளையும் அணிந்திருந்தனர். அவர்களது கச்சிதமான உடல்கள் நீலக் கற்களாலும், பால் போன்ற வெண் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
கோதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். பெரியாழ்வார் கிருஷ்ண கதைகளைச் சொல்லிச் சொல்லி அவளை வளர்த்தார். விரைவில் கோதையின் மனமும் கிருஷ்ணரின் மீது முற்றிலும் மூழ்கியது. கோதையின் காதல் பெருக, கிருஷ்ணரை மட்டுமே திருமணம் செய்வது என்ற திடமான எண்ணத்தை ஆரம்பத்திலேயே மேற்கொண்டாள்.
ஸ்ரீமத் பாகவதத்தின் ஆறாவது காண்டத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கதை
மன்னர் சித்ரகேது சூரசேன நாட்டை மையமாகக் கொண்டு உலகம் முழுவதையும் ஆட்சி செய்து வந்தார். சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த சித்ரகேதுவிற்கு பல மனைவியர்...