- Advertisement -spot_img

CATEGORY

ஞான வாள்

ஜோதிட அணுகுமுறையில் மாற்றம் தேவையா?

மக்கள் பொதுவாக எதிர்காலத்தை அறிந்துகொள்வதற்கும் துன்பமயமான குழப்ப சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் ஜோதிடர்களை நாடுவது வழக்கம். எனக்கு நேரம் எப்படி இருக்கிறது” என்று கேட்பவர்களுக்கு தினசரி பலன், வார ராசிபலன், பெயர்ச்சி பலன்கள் என தொடர்ச்சியாக ஜோதிடர்கள் தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் மேலாக கைரேகை, ஜென்ம ஜாதகம், ஓலைச்சுவடிகள், கிளி ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், குறி சொல்பவர்கள் என மக்கள் ஒவ்வொரு திசையிலும் ஜோதிடர்களை அணுகி ஆலோசிப்பதை கண்கூடாக காண்கிறோம்.

துரியோதனனின் தொடையைப் பிளந்த பீமனின் செயல் சரியா ?

மிகவும் சிக்கலான தர்மத்தின் நெறிமுறைகளை மக்கள் புரிந்துகொள்ள உதவும் இதிகாசமே மஹாபாரதம். ஆயினும், தர்மத்தின் கொள்கைகளை அதர்மத்தில் ஊறித் திளைத்து நிற்கும் மக்களால் புரிந்துகொள்ள முடியாத காரணத்தினால், மஹாபாரதத்தின் சில பகுதிகள் பொதுமக்களுக்கு புரிவதில்லை. தர்மத்தினை எடுத்துரைக்கும் நூலில் அதர்மம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் சுட்டிக் காட்டும் உதாரணங்களில் ஒன்று: பீமன் துரியோதனனை தொடையில் அடித்து வதம் செய்த நிகழ்ச்சியாகும். பீமனின் அந்த செயலை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை சற்று விரிவாகக் காண்போம்.

வேடனின் அம்பில் கிருஷ்ணர் மடிந்தாரா?

வேடனின் அம்பினால் கிருஷ்ணர் மரணமடைந்தார் என்று நினைக்கும் குறைமதியாளர்கள், இறைவன் தனது சொந்த விருப்பத்தினால் இவ்வுலகை விட்டுச் சென்றார் என்பதை பாகவதத்திலிருந்து அறியலாம். இவ்வாறாக, பக்தியினால் கிருஷ்ணரை அணுகுவோர் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் அவரது மறைவு லீலை அரங்கேற்றப்பட்டது.

கிருஷ்ணர் எந்த மதத்தை சார்ந்தவர்

கடவுளை இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் என்று மதத்தின் அடிப்படையில் அணுகாமல், தத்துவத்தின் அடிப்படையில் அணுகுதல் சாலச் சிறந்ததாகும். கிருஷ்ணர் ஒரு இந்துவோ முஸ்லீமோ கிருஸ்தவரோ கிடையாது–அவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அனைத்திற்கும் உரிமையாளர், பரம அனுபவிப்பாளர், அனைவருக்கும் உற்ற நண்பன். இக்கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு, மக்கள் இதனைப் புரிந்துகொள்ளும்போது, உலகம் முழுவதிலும் அமைதியும் வளமும் நிச்சயம் ஏற்படும்.

கத்தரிக்காயும் குருவும்

முறையான குருவிற்கான சிறிதளவு தகுதிகளையும் இல்லாத இவர்கள், விளம்பர உத்திகளின் மூலமாக பிரபலமடைந்து மக்களை வசதியாக ஏமாற்றுகின்றனர். காலில் விழுவதற்கு ரூ. 10,000, கட்டிப் பிடிப்பதற்கு ரூ. 50,000, வீட்டிற்கு வருவதற்கு ஒரு இலட்சம், தீக்ஷை அளிப்பதற்கு ஐந்து இலட்சம் என்றெல்லாம் ஆன்மீகத்தைப் பட்டியல்போட்டு விளம்பரப்படுத்தி சொகுசாக வாழ்கின்றனர்.

Latest

- Advertisement -spot_img