தபால் பெட்டியில் தபால் போடுவதைப் பார்த்து…

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

—ஜயாத்வைத ஸ்வாமியின் பேட்டியிலிருந்து

புரோக்லின் நகரின் கிழக்கு நதிக்கரையில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், ஸ்ரீல பிரபுபாதரும் நானும் ஹென்றி தெருவில் உள்ள நமது கோயிலுக்கு காரில் திரும்பினோம். கோயிலுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக, வீதியின் ஓரத்தில் ஒரு காட்சியைக் கண்டோம். அங்கே சிறுவன் ஒருவன் தபால் பெட்டியில் தபால் போட முயன்றான், அவனுடன் வந்திருந்தவர் அவனைத் தூக்கி அவனுக்கு உதவினார். அக்காட்சி ஐந்து அல்லது பத்து நொடிகள் மட்டுமே இருந்திருக்கும். ஆயினும், காரில் இருந்தபடி அதைக் கண்ட பிரபுபாதர் அக்காட்சியில் ஆழ்ந்தார். அவரது கண்கள் பெரிதாகி, பிரகாசமாயின, அவரது கவனத்தில் அக்காட்சி மட்டுமே இருந்தது.

பிரபுபாதர் கல்கத்தாவில் வாழ்ந்த தமது குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்கிறாரோ என்று நான் யோசித்தேன். அந்த மனிதன் சிறுவனை இறக்கி விட்ட பின்னர், பிரபுபாதர் கூறினார், “அச்சிறுவனால் அச்செயலைச் சுயமாகச் செய்ய முடியாது. ஆயினும், பாசமுள்ள தந்தை உதவி செய்யும்போது, அது சாத்தியமாகிறது. அதுபோலவே, ஜீவன்களான நமக்கென்று என்ன சக்தி உள்ளது? இருப்பினும், பகவான் அல்லது ஆன்மீக குருவினால் பாசமுடன் உதவப்படும்போது, அது சாத்தியமாகிறது.

தபால் பெட்டியில் சிறுவன் தபால் போடுவதைப் பார்த்து பிரபுபாதர் எங்களுக்கு தத்துவத்தை எடுத்தரைத்தார்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives