- Advertisement -spot_img

CATEGORY

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பரமாத்மா, எல்லா இடங்களிலும் எல்லா உயிர்வாழிகளிலும் சமமாக வீற்றிருப்பதைக் காண்பவன், தனது மனதால் தன்னை இழிவுபடுத்திக் கொள்வதில்லை. ஜட இயற்கையே எல்லாச் ச

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பக்தி யோகத்தின் விதிகளை ஒருவனால் பயிற்சி செய்ய முடியாவிடில், கிருஷ்ணருக்காக மட்டும் வேலை செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். இத்தகைய நிலையில் இருப்பவன், கிருஷ்ண பக்தியின் செயல்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்யலாம்; அவ்வாறு செயல்படுபவனும் படிப்படியாக பக்குவநிலையை அடைய முடியும்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

“விஸ்வரூபம்” என்னும் தலைப்பைக் கொண்ட பதினொன்றாம் அத்தியாயம், கிருஷ்ணர் கூறிய பரம இரகசியங்களைக் கேட்டதால் தனது மயக்கம் தெளிவடைந்து விட்டதாக அர்ஜுனன் அறிவிப்பதுடன் தொடங்குகின்றது. கிருஷ்ணரின் அழிவற்ற பெருமைகளை முற்றிலுமாக ஏற்றபோதிலும், அவர் தமது திருவாயினால் கூறிய வைபவங்கள் அனைத்தையும் அவரது விஸ்வரூபத்தில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அர்ஜுனன் முன்வைத்தான்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணர் கூறியவை அனைத்தையும் அர்ஜுனன் முழுமையாக ஏற்றான். பாதியை ஏற்று பாதியை மறுக்கக்கூடிய நபர்களால் பகவத் கீதையையும் கிருஷ்ணரையும் புரிந்துகொள்ள முடியாது. நாம் கீதையைப் பின்பற்ற விரும்பினால், அர்ஜுனனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கீதையை முழுமையாக ஏற்க வேண்டும். கிருஷ்ணர் எவ்வாறு இவ்வுலகம் முழுவதும் வியாபித்துள்ளார் என்பதை அறிய விரும்பிய அர்ஜுனன், அவற்றை விளக்கும்படி கிருஷ்ணரிடம் வேண்டினான். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதில் ஒருபோதும் சோர்வடையாத அர்ஜுனன், அமிர்தம் போன்ற அவரது வார்த்தைகளை மேன்மேலும் சுவைக்க விரும்பினான்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிருஷ்ணரை சிலர் மதிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி இயற்கையாக எழலாம். அவர் மனிதர்களுக்கு மத்தியில் தோன்றுவதால், அவரது தெய்வீக இயற்கையை உணராத முட்டாள்கள் அவரை ஏளனம் செய்கின்றனர். கிருஷ்ணரை உள்ளபடி ஏற்றுக் கொள்ளாமல், அவரை ஒரு சக்தியுடைய மனிதனாகவோ, கர்மத்தினாலும் தவத்தினாலும் அற்புத ரூபம் பெற்றவராகவோ, அருவமான அவர் ரூபத்தைத் தாங்கி வருவதாகவோ அந்த முட்டாள்கள் கற்பனை செய்கின்றனர். மனிதரைப் போல தோன்றினாலும், அவர் சாதாரண மனிதரல்ல; அவரது திருமேனி நித்தியமானது, அறிவு நிரம்பியது, மற்றும் ஆனந்தமயமானது. அவர் இவ்வுலகில் தோன்றும்போது, தனது நித்திய உருவில் தனது அந்தரங்க சக்தியின் மூலமாகத் தோன்றுகிறார். இதைப் புரிந்துகொள்ளாத மூடர்கள், ராட்சசத்தனமான கருத்துக்களாலும் நாத்திகக் கருத்துக்களாலும் கவரப்பட்டு, தங்களது முக்திக்கான ஆசைகள், கர்மங்கள், அறிவுப் பயிற்சிகள் என அனைத்திலும் தோல்வியை சந்திக்கின்றனர்.

Latest

- Advertisement -spot_img