“பல்வேறு உடல்களைப் பெறுவதற்கு மனமே காரணமாக அமைகிறது. அந்த உடல்கள் வெவ்வேறு உயிரினங்களின் உடல்களாக அமையலாம். ஒருவன் தனது மனதை ஆன்மீக அறிவைப் பெறுவதற்குப் பயன்படுத்தினால், அவன் உயர்ந்த உடலைப் பெறுகிறான். ஆனால் ஜட இன்பத்தைப் பெறுவதில் தனது மனதைப் பயன்படுத்துபவன் இழிந்த உடலைப் பெறுகிறான்,” என்று ஜட பரதர் கூறினார்.
ஒரு குழந்தைக்கு தண்டனை கொடுத்து எவ்வளவு நேரம் அதனை ஓரத்தில் உட்கார வைக்க முடியும்? அதனை நற்செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். அதுபோல, நாம் நமது தவறுகளுக்கு தண்டனையாக மௌன விரதம் இருக்கலாம், ஆனால் கிருஷ்ணரின் திருநாமங்களைப் பாடுவதும் அவரைப் பற்றி உரையாடுவதும் நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள் என்று விளக்கமளித்தேன். பக்தித் தொண்டின் அத்தகு நற்செயல்கள் நமது உண்மையான தன்மை என்றும், பல்வேறு தவறுகள் நிறைந்த இக்கலி யுகத்தில் கிருஷ்ணரின் நாமத்தை உச்சரிப்பதே மிகச்சிறந்த வழி என்றும் எடுத்துரைத்தேன்.
புகழுடனும் பக்தியுடனும் பாரதத்தினை ஆட்சி செய்து வந்த மாமன்னர் பரதர், ஒரு மானிடம் கொண்ட அதீத பற்றுதலால், மானாகப் பிறந்து ஒரு பிறவியை வீணடித்த வரலாறு ஸ்ரீமத் பாகவதத்தின் ஐந்தாம் காண்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் இங்கே பகவத் தரிசனத்தின் வாசகர்களுக்காக.
சுந்தர காண்டத்தின் முப்பத்தி ஆறாவது அத்தியாயத்தில், பகவான் இராமர் கடலைக் கடந்து இராவணனை நிச்சயம் வெற்றி கொள்வார் என்று சீதையிடம் ஹனுமான் உறுதியளிக்கின்றார். அப்போது இராமர் சீதையைப் பிரிந்து பெரும் வருத்தத்தில் இருப்பதாகக் கூறியபோதிலும், மதுவிற்கோ மாமிசத்திற்கோ அடிமையானதில்லை என்று சீதைக்கு ஹனுமான் (ஸ்லோகம் 41) வெளிப்படுத்துகிறார்
இன்று உலகெங்கிலும் வேகமாக வளர்ந்து வரும் விஞ்ஞானப்பூர்வமான அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு. கிருஷ்ண பக்தி இயக்கமானது எல்லா தரப்பட்ட மக்களும் எளிதில் பின்பற்றக்கூடியதாகும். எல்லைகளைக் கடந்து ஆன்மீக அனுபவம் பெற மக்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அவர்களின் ஆவலை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் நிறைவேற்றி வருகிறது, இதன் மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளனர்.