AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

படித்தவனுக்கும் பாமரனுக்கும் ஏற்ற பக்தி

பக்தி–யாரெல்லாம் இதில் ஈடுபடலாம்? என்னும் கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழக்கூடிய ஒன்றாகும். பக்தி என்று சொல்வதைவிட பக்தித் தொண்டு என்று உரைத்தல் சிறந்ததாகும். ஏனெனில், பக்தி என்பது பகவானுக்குச் செய்யும் தொண்டுகளைக் குறிக்கும். பகவானின் திருநாமத்தைப் பாடுதல், பகவத் கீதை, பாகவதம் போன்ற புத்தகங்களைப் படித்தல், அவற்றைக் கேட்டல், பகவானுடைய விக்ரஹத்திற்கு ஆரத்தி, நைவேத்தியம் போன்ற சேவைகளைச் செய்தல், பக்தர்களுக்குப் பணிவிடை செய்தல், பிரசாதம் விநியோகித்தல், கோவிலை சுத்தம் செய்தல், பக்தித் தொண்டை மற்றவர்களுக்கு எடுத்துரைத்தல், தீர்த்த யாத்திரை செல்லுதல், தன்னிடமிருக்கும் அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணித்தல் போன்ற பல்வேறு செயல்கள் பக்தித் தொண்டு என்று அழைக்கப்படுகின்றன.

எனக்கு என் கண்கள் வேண்டும்!

பகவானின் கட்டளையை நிறை வேற்ற எனக்கு சக்தி தருமாறு அவரிடமே வேண்டிக் கொண்டு, கிட்டத்தட்ட மூச்சிரைக்க பூஜாரியின் அறையை நோக்கி முன்னேறி னேன். அங்கு திரு. ஜனநிவாஸ பிரபு ஸ்ரீமத் பாகவதத்தைப் படித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்த அறையின் சூழ்நிலை மிதமிஞ்சிய அமைதியுடன் வேறோர் உலகத்தைப் போன்று இருந்தது. அவர் என்னைக் கவனிப்பதற்காகச் சில நிமிடங்கள் காத்திருந்தேன். பிறகு, நடந்த விஷயத்தைக் கூறியபோது, அவர் நரசிம்மதேவரின் மற்றொரு பூஜாரியும் அவரது சகோதரருமான திரு. பங்கஜாங்கிரி பிரபுவைப் பார்க்கும்படி கூறினார். ஆனால் ஏதோ காரணத்தினால், செல்ல வேண்டாம் என்று கருதினேன்.

கிரிக்கெட் காய்ச்சல்

ஒவ்வொரு காய்ச்சலுக்கும் பின்னணியில் சில கிருமிகள் இருப்பதுபோல, கிரிக்கெட் காய்ச்சல் பரவுவதற்கும் சில கிருமிகள் காரணமாக உள்ளன. இந்த கிரிக்கெட் வைரஸ், ஏற்கனவே கிரிக்கெட் வைரஸிற்கு அடிமையானவர்களிடமிருந்து தொற்றிக்கொள்ளும். அந்த கிரிக்கெட் அடிமைகள், உண்பதும் கிரிக்கெட், சுவாசிப்பதும் கிரிக்கெட், இருமுவதும் கிரிக்கெட் என வாழ்கின்றனர். அதன் மூலம் கிரிக்கெட் கிருமிகளை மற்றவர்களுக்கும் பரவச் செய்கின்றனர். செய்தித்தாள்கள், தொலைக்காட்சி பெட்டி, விளம்பரப் பலகைகள் போன்றவை இக்கிருமிகளைத் தேக்கி வைத்திருக்கும் சாதனங்கள். இவற்றைச் சற்றேனும் அணுகினால் போதும், உடனடியாக நாமும் கிருமியால் தாக்கப்படுவோம். இந்தக் கிருமிக் கூட்டங்களிடமிருந்து முற்றிலும் விலகியிருப்பதே கிரிக்கெட் காய்ச்சல் நம்மைத் தாக்காமல் காப்பாற்றிக் கொள்ள சிறந்த வழியாகும்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவோம்

மஹாராஜா பரீக்ஷித், தன் தாய் உத்தரையின் கருவறையில் இருந்தபோது, அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரம் பெரும் சக்தியுடன் அவரை அழிக்க வந்தது. அப்போது கருணையே வடிவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உத்தரையின் பிரார்த்தனைக்கு உகந்து, மிகுந்த பேரொளியுடன் கருவறையில் தன்முன் தோன்றி தன்னைக் காப்பாற்றுவதை பரீக்ஷித் கண்டார். தன்னைக் காப்பாற்றிய அந்த நபர் யார் என வியந்த அவர், பிறந்த பின்னரும் அவரையே தேடிய வண்ணம் இருந்ததால், பரீக்ஷித் என்று பெயர் பெற்றார்.

வயோதிக குரங்கின் விவேகம்

மன்னர் ஒருவர் தனது மகன்களின் பொழுது போக்கிற்காக தனது அரண்மனையில் ஒரு குரங்குக் கூட்டத்தினை வளர்த்து வந்தார். மிகவும் ருசியான உணவுகள் தேவைக்கு அதிகமாகவே அக்குரங்கு களுக்கு வழங்கப் பட்டன.

Latest