வைகுண்ட ஏகாதசி அல்லது மோக்ஷத ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசி, எல்லா ஏகாதசிகளிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் அது மற்றெல்லா ஏகாதசி விரதத்திற்கும் சமமானது என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளபோதிலும், எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருத்தல் என்பது வைஷ்ணவ மரபில் அவசியமான ஒன்றாகும்.
பக்குவமற்ற புலன்கள், ஏமாற்றும் இயல்பு, தவறு செய்யும் தன்மை, மாயையின் வசப்படுதல் ஆகிய நான்கு முக்கிய குறைபாடுகள் சாதாரண உயிர் வாழிகளிடம் காணப்படுகின்றன. இக்குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டு விளங்கும் சாஸ்திர விதிகள், எல்லா சாதுக்களாலும் ஆச்சாரியர்களாலும் மஹாத்மாக்களாலும் எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றின்படி, மனித வாழ்வு தவத்திற்கானதாகும். மனித வாழ்க்கை என்பது நாய்களுக்கும் பன்றிகளுக்கும்கூட கிடைக்கும் புலனின்பத்திற்கானது அல்ல என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (5.5.1) ரிஷபதேவர் கூறுகிறார். மனித வாழ்வில் தவத்தை மேற்கொள்பவர்கள் தூய்மையான தளத்திற்கு உயர்வு பெற்று உன்னத ஆனந்தத்தை அடைய இயலும்.
வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.
ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம் இல்லாதவள். விருந்தாவனத்தில் கோபியர்கள் கிருஷ்ணருடன் லீலைகளைப் புரிவதற்கான சந்தர்பத்தை ராதாராணியே ஏற்படுத்திக் கொடுப்பாள். இதர கோபியர்கள், கிருஷ்ணருடன் மாதுர்ய பாவத்தைப் (தெய்வீக காதல் உணர்வுகளைப்) பகிர்ந்துகொள்ளும்போது, தான் கிருஷ்ணருடன் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியடைவாள் ஸ்ரீமதி ராதாராணி. அவ்வளவு கருணை உடையவள் ராதாராணி, நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.
மன்னர் சாதுக்களுக்கு ஏதேனும் பரிசுகளை வழங்குவார், அவர்களிடமிருந்து அவற்றை எளிமையாகத் திருடிவிடலாம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஒரு திருடனும் வந்தான்.