குழந்தை கிருஷ்ணரை யசோதை கயிற்றினால் உரலில் கட்டிப்போட்டாள். உலகையே கட்டிப்போட்டிருக்கும் அந்த கிருஷ்ணரை யசோதை கட்டிப்போட்ட சம்பவம் பக்தர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாகும். தீபாவளி தினத்தன்று நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, யசோதையைப் போன்ற களங்கமற்ற பக்தியை விரும்பும் பக்தர்கள் அந்த பகவான் தாமோதரருக்கு (கயிற்றினால் உரலில் கட்டப்பட்டவருக்கு) நெய் தீபம் ஏற்றி ஒரு மாதம் முழுவதும் வணங்குகின்றனர்.
டைக்கப்பட்ட உயிர்வாழிகளில் முதலானவரான பிரம்மதேவரின் மகனான ஸ்ரீ நாரத முனிவர் பன்னிரண்டு மஹாஜனங்களில் (அதிகாரம் பொருந்திய நபர்களில்) ஒருவராவார். அந்த நாரதரின் போதனைகளை குரு சீட பரம்பரையில் பெற்று தம் புத்தகங்களின் மூலமாக இலட்சோப லட்சம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். குரு சீட பரம்பரையில் வரும் ஆன்மீக குருவானவர் நாரத முனிவரின் பிரதிநிதி என்றும், அவருடைய போதனைகளுக்கும் நாரதரின் போதனைகளுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தமது பாகவத விளக்கவுரையில் (6.5.22) கூறியுள்ளார். நாம் எந்த அளவிற்கு நாரத முனிவரைப் பற்றியும் அவரது சேவகரான ஸ்ரீல பிரபுபாதரைப் பற்றியும் கேட்கின்றோமோ, அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் உபதேசங்களிலும் செயல்களிலும் இருக்கக்கூடிய ஒற்றுமையினைக் காணலாம்.
விருந்தாவனத்திற்கு ஸ்ரீல பிரபுபாதர் விஜயம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில், தமது வரவேற்பு அறையில் உபன்யாசம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம், குரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை நோக்கி பாய்ந்தது. உடனே, விஷாகா தாஸி ஒரு துணியை வீசி பெரும்பாலான வாழைப்பழங்களை குரங்கிடமிருந்து மீட்டாள். இருப்பினும், குரங்கு சில பழங்களை எடுத்துச் சென்று விட்டது.
பக்திவினோத தாகூர் தம் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடையறாது தொண்டு செய்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க இவர் ஆற்றிய தொண்டு, ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும்.
சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து காணப்பட்டது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ ஸம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது.
இரவு மணி 9:30. விருந்தாவனத்தில் கோடை கால இரவு வேளையில், ஸ்ரீல பிரபுபாதர் என்னை அவரது அறைக்கு அழைத்து சில சேவைகளை வழங்கிய பின்னர் கூறினார், “நீங்கள் இப்போது ஓய்வெடுக்கச் செல்லலாம்.” அதனைத் தொடர்ந்து, ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்கு முன்பாக நான் எனது பாய், கொசு வலை முதலியவற்றை தயார் செய்ய பதினைந்து நிமிடம் ஆயிற்று. சுமார் பத்து மணி இருக்கும். பிரபுபாதருடைய அறையிலிருந்து சப்தம் கேட்டது.