- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீ கிருஷ்ண பிரசாதம்

ஒருவனது ஆகாரம் சுத்தமானதாக இருந்தால் அவனது உள்ளமும் உடலும் தூய்மையாக இருக்கும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, உண்ணும் உணவு குறித்து நாம் எப்போதுமே கவனத்துடனும் கண்டிப்புடனும் இருத்தல் வேண்டும். உணவை சமைப்பவரின் அல்லது பரிமாறுபவரின், மனநிலையும் உணர்வு களும் உணவைப் பாதிக்கும். தீய உணர்வுடையோரால் வழங்கப்படும் உணவை உண்பதால், உண்பவரின் மனநிலை பாதிக்கப்படுகிறது. அதுமட்டு மின்றி, உணவு வழங்குபவரின் பாவகர மான கர்மாக்களிலும் (தீவினைகளிலும்) உண்பவர் பங்கெடுத்துக்கொள்ள நேரிடும்.

மக்கள்தொகைப் பெருக்கமும் உண்மையான பற்றாக்குறையும்

இயற்கையின் நோக்கத்தையும், அதன் சட்டங்களையும் நாம் புரிந்து கொண்டால், அமைதியும் முன்னேற்றமும் கொண்ட உலகத்தில் இயற்கையோடு இணைந்து சுலபமான முறையில் நம்மால் வாழ இயலும். ஆனால் இயற்கையின் சட்டங்களையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ளாத மூடர்களாக நாம் இருந்தால், வெறும் குழப்பங்களைத்தான் நாம் உண்டாக்குவோம். நவீன நாகரிகம் உலகம் முழுவதிலும் குழப்பங்களை உண்டாக்கியிருப்பதற்கு, இயற்கையின் சட்டங்கள் அல்லது கடவுளின் சட்டங்களைப் பற்றிய அறியாமையே காரணம். அச்சட்டங்கள் மிகவும் எளிமையானவை என்றாலும், முறையான ஆன்மீக மூலத்திடமிருந்து நியாயமான விதத்தில் விவேகத்துடன் புரிந்துகொள்ளப்பட வேண்டியவை. கடவுள் உன்னதமானவர், நாம் அனைவரும் அவரின் தொண்டர்கள், இயற்கை வளங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தமானவை–இக்கருத்துகள் எல்லா மதப்பிரிவினராலும் ஒப்புக்கொள்ளப்படுபவை. மிகவும் எளிமையான இக்கருத்துகள் மிகவும் தெளிவானவையுமாகும்.

தமிழ் மொழியும் தமிழ் பண்பாடும்

தொன்றுதொட்டு சீரும் சிறப்புமாகத் திகழும் நம் தமிழ் மொழி, செம்மொழி என்னும் சிறப்பைப் பெற்று அதனைத் தற்போது கொண்டாடி வருகிறோம். கலைஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் என பற்பல சான்றோர்களைப் பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் போற்றிப் புகழும் இத்தருணத்தில், செம்மொழியான தமிழ் மொழி மெல்லமெல்ல கரைந்து வருவது எவராலும் மறுக்க முடியாத கசப்பான உண்மை. கடையேழு வள்ளல்களைக் கண்ட தமிழ்த்தாய், தற்போது ஈகைத் தன்மையே இல்லாதவர்களைக் காண்கிறாள். கண்ணகியையும் கோப்பெருந்தேவியையும் கண்ட தமிழ்த்தாய், தற்போது கற்பற்ற மங்கையர்கள் பாராட்டப்படுவதைக் கேட்கிறாள். இனிமையான பக்திப் பாடல்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்த்தாய், தற்போது கொச்சையான ஆபாசமான பாடல்களால் சிதறடிக்கப்படுகிறாள். ஏன் இந்த சீர்கேடு? இந்த சீர்கெட்ட நிலை குறித்து சற்று அலசிப் பார்ப்போம்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால்

பிறப்பு இறப்பைப் பற்றியும், அவற்றிற்கு அப்பால் இருக்கக்கூடிய உண்மையைப் பற்றியும் தற்போது ஆராய உள்ளோம். குழந்தைகள் பிறக்கின்றன, விலங்குகளும் பிறக்கின்றன, செடி கொடிகள்கூட பிறக்கத்தான் செய்கின்றன; இதனால் பிறப்பைப் பற்றி அனைவரும் அறிவர். அதுபோன்றே மரணமும் அனைவரும் அறிந்ததே. மரணமடைந்த பின், இந்தியாவில் உடலை எரித்து விடுவர், மற்ற இடங்களில் புதைத்து விடுவர், வேறுசில இடங்களில் கழுகுகள் சாப்பிடத் தூக்கியெறிந்து விடுவர். இத்தகு பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவில் வாழ்க்கை அமைந்துள்ளது. பிறப்பு என்றால் என்ன என்பதையும், இறப்பு என்றால் என்ன என்பதையும் நாம் அறிவோம். ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாமலேயே உள்ளோம்.

சாது சங்கம்

சங்கம் எடுத்துக் கொள்ளும்பொழுது நாம் நமது உணர்வுகளையும் அனுபவங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். சாது சங்கத்தை ஏற்றுக்கொள்ளும்போது சாதுக்களின் உணர்வுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறோம். சங்கம் என்றால் மற்றவருக்கான அன்பை வளர்த்துக் கொள்ளுதல் என்று பொருள். குருவின் சங்கத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு சீடன், அந்த சங்கத்தை திடப்படுத்துவதற்கு நல்ல உறவு தேவை. நல்ல உறவை ஏற்படுத்துவதற்கான ஆறு விஷயங்களை மிகச்சிறந்த கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் தனது படைப்பான உபதேசாமிருதத்தில் (ஸ்லோகம் 4) அழகாக கூறியிருக்கிறார்.

Latest

- Advertisement -spot_img