- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

கடவுள் இருக்கின்றாரா?

கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்னும் கேள்வி பலரின் மனதில் அவ்வப்போது எழக்கூடிய ஒன்றாகும். கடவுள் இருக்கின்றார் என்று கூறும் ஆத்திகர்களுக்கும், கடவுள் இல்லை என்று கூறும் நாத்திகர்களுக்கும் இடையில் உலகெங்கிலும் அவ்வப்போது வாதங்கள் நடைபெறுகின்றன. அவ்வாதங்களின் இறுதியில், கடவுள் இருக்கின்றார் என்பதே பெரும்பாலும் முடிவு செய்யப்படுகின்றது. எண்ணிலடங்காத அத்தகு வாதங்களின் ஒரு சிறு பகுதி, ஸ்ரீ கிருஷ்ண தரிசனத்தின் வாசகர்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏகாதசி, விரதங்களில் முதன்மையானது

வைகுண்ட ஏகாதசி அல்லது மோக்ஷத ஏகாதசி என்று அறியப்படும் ஏகாதசி, எல்லா ஏகாதசிகளிலும் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் அது மற்றெல்லா ஏகாதசி விரதத்திற்கும் சமமானது என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளபோதிலும், எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருத்தல் என்பது வைஷ்ணவ மரபில் அவசியமான ஒன்றாகும்.

மனித வாழ்வின் நான்கு எதிரிகள்

பக்குவமற்ற புலன்கள், ஏமாற்றும் இயல்பு, தவறு செய்யும் தன்மை, மாயையின் வசப்படுதல் ஆகிய நான்கு முக்கிய குறைபாடுகள் சாதாரண உயிர் வாழிகளிடம் காணப்படுகின்றன. இக்குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டு விளங்கும் சாஸ்திர விதிகள், எல்லா சாதுக்களாலும் ஆச்சாரியர்களாலும் மஹாத்மாக்களாலும் எவ்வித மாற்றமுமின்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவற்றின்படி, மனித வாழ்வு தவத்திற்கானதாகும். மனித வாழ்க்கை என்பது நாய்களுக்கும் பன்றிகளுக்கும்கூட கிடைக்கும் புலனின்பத்திற்கானது அல்ல என்று ஸ்ரீமத் பாகவதத்தில் (5.5.1) ரிஷபதேவர் கூறுகிறார். மனித வாழ்வில் தவத்தை மேற்கொள்பவர்கள் தூய்மையான தளத்திற்கு உயர்வு பெற்று உன்னத ஆனந்தத்தை அடைய இயலும்.

கார்த்திக் மாதமும் தாமோதர பூஜையும்

கார்த்திக் மாத பூஜையில் மிகவும் முக்கியமானது என்னவெனில், பகவான் கிருஷ்ணரை தாமோதரரின் வடிவில், அதாவது அவரது வயிற்றை கயிற்றின் மூலம் உரலுடன் கட்டப்பட்ட வடிவில் வழிபடுவதாகும். இந்த வழிபாட்டினை விருந்தாவனத்தில் செய்வது சாலச் சிறந்தது என்றாலும், ஒவ்வொருவரும் அவரவரது வீட்டில் மாலைப் பொழுதில் இவ்வழிபாட்டினை எளிமையாக சிறப்புடன் செய்யலாம். உரலில் கட்டப்பட்ட கிருஷ்ணரின் படம் இஸ்கான் கோவில்களில் கிடைக்கும் (கோவிலுக்குச் செல்ல இயலாதோர் இப்பத்திரிகையின் அட்டைப்படத்தைக்கூட உபயோகிக்கலாம்). அப்படத்தை தாமோதர மாதம் முழுவதும் உங்களது பூஜையறையில் வைத்து பூஜிக்கவும். தினசரி மாலை வேளையில், இக்கட்டுரையுடன் வழங்கப்பட்டுள்ள தாமோதராஷ்டகம் என்னும் பாடலைப் பாடியபடி, மண் விளக்கில் நெய் கொண்டு தாமோதரருக்கு ஆரத்தி செய்ய வேண்டும். அனுஷ்டிக்க வேண்டிய இதர வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இன்பத்தைத் தேடி…

இவ்வுலகிலுள்ள அனைவரும் இன்பத்தைத் தேடி அலைகின்றனர். இன்பமாக இருப்பதற்காக சிலர் மது அருந்துகின்றனர், சிலர் புகை பிடிக்கின்றனர், சிலர் திரைப்படம் பார்க்கின்றனர், வேறு சிலர் பாடல்களைக் கேட்கின்றனர். ஆனால் எவராலும் நிரந்தர இன்பத்தை அடைய முடிவதில்லை. எந்த ஒரு செயல் (அல்லது பொருள்) நமக்குத் தொடர்ந்து இன்பத்தைத் தரக்கூடியதாக இருக்கின்றதோ அதுவே உண்மையான இன்பம். உதாரணத்திற்கு, நமக்கு மிகவும் இன்பம் தரக்கூடிய குலாப் ஜாமூனை எடுத்துக் கொள்வோம்.

Latest

- Advertisement -spot_img