பல்கலைக்கழக படிப்பை விட்டுவிட்டு கிருஷ்ணரிடம் சரணடைந்த புதிய பக்தர் ஒருவரின் தாயிடமும் அவளுடன் வந்த யூத மத பாதிரியாருடனுமான ஸ்ரீல பிரபுபாதரின் உரையாடல்
ஸ்ரீல பிரபுபாதர்: (பக்தரின் தாயிடம்) எங்களின் வேத அறிவின் படி...
கலி யுகத்திற்கு உகந்த திவ்ய க்ஷேத்திரமான ஜகந்நாத புரிக்கு பெருமை சேர்த்தவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்றால் அது மிகையாகாது. ஜகந்நாத புரியிலுள்ள பல்வேறு முக்கிய ஸ்தலங்கள் அவருடன் தொடர்புடையவை என்பதும், புரிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் அவரைப் பின்பற்றுவோர் என்பதும் இதற்கு சான்றாக அமைகின்றது. புரியின் பிரதான ஸ்தலமாகிய ஜகந்நாதரின் திருக்கோயிலைப் பற்றி “தீர்த்த ஸ்தலங்கள்" பிரிவின் சென்ற பகுதியில் (பிப்ரவரி மாத பகவத் தரிசனத்தில்) கண்டோம். இந்த இதழில் புரியிலுள்ள இதர முக்கிய ஸ்தலங்களைப் பற்றி காணலாம்.
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். “வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும் இந்த ஸ்ரீமத் பாகவதம் வேத ஞானத்தின் மிகவும் பூரணமான அதிகாரப்பூர்வமான விளக்கமாகும். இதன் 18,000 ஸ்லோகங்கள் 12 காண்டங்களாக விரிந்துள்ளன.
மூல இராமாயணமான வால்மீகி இராமாயணத்தை படிப்பதன் மூலமாக திருப்திகரமான பதிலைப் பெற முடியும். வால்மீகி இராமாயணத்தைப் படித்தவர்கள் “வாலியை இராமர் ஏன் வதம் செய்தார்” என்ற கேள்வியை ஒருபோதும் கேட்கமாட்டார்கள்; ஏனெனில், இராமரின் செயலுக்கான காரணம் அங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீ இராமரே பரம்பொருள், பரம புருஷ பகவான் என்பதும் அங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.
அவ்வளவு எளிமையான, உயர்ந்த இந்த ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்கும் கலையை நாமும் பயின்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பது மிகவும் அவசியம். பிரகலாத மஹாராஜர் இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார். பகவானின் திருநாமத்தை அவர் எச்சூழ்நிலையிலும் தவறாது உரைத்ததோடு மட்டுமல்லாது தனது சக நண்பர்களுக்கும் இதனைப் பழக்கிக் கொடுத்து இன்புறச் செய்தார்.