- Advertisement -spot_img

CATEGORY

ஞான வாள்

ஏகலைவனின் குரு பக்தி

குருவினால் புறக்கணிக்கப்பட்டவன் கிருஷ்ணராலும் புறக்கணிக்கப்படுகிறான். கிருஷ்ணர் பக்தர்களைக் காப்பவர், துஷ்டர்களை அழிப்பவர். ஏகலைவன் குரு பக்தனாக இருந்திருந்தால், கிருஷ்ணர் ஏகலைவனைக் கொன்றிருக்க மாட்டார். அவன் துஷ்டனாக இருந்த காரணத்தினால்தான், கிருஷ்ணர் தனது கரங்களாலேயே அவனைக் கொன்றார். கிருஷ்ணர் அசுரர்களை மட்டுமே கொல்வார், பக்தர்களை என்றும் பாதுகாப்பார். ஏகலைவன் அசுரத் தன்மை கொண்டவன் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.

செய்யும் தொழிலே தெய்வமா?

இன்பத்தை வேண்டி பல்வேறு தொழில்களைச் செய்கின்ற நாம், தொழில்களை தெய்வங்களாக எண்ணி காலத்தினை வீணாக்குகின்ற நாம், உண்மையாக செய்ய வேண்டிய தொழில் பக்தித் தொண்டு மட்டுமே என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். பிறவிதோறும் அரைத்தவற்றையே மீண்டும் அரைத்திடாது இனியுள்ள காலங்களையாவது நன்முறையில் பக்தித் தொண்டில் ஈடுபடுத்தி உண்மையான ஆனந்தத்தினை அடைவோமாக.

இராமர் வாலியை வதம் செய்தது ஏன்?

மூல இராமாயணமான வால்மீகி இராமாயணத்தை படிப்பதன் மூலமாக திருப்திகரமான பதிலைப் பெற முடியும். வால்மீகி இராமாயணத்தைப் படித்தவர்கள் “வாலியை இராமர் ஏன் வதம் செய்தார்” என்ற கேள்வியை ஒருபோதும் கேட்கமாட்டார்கள்; ஏனெனில், இராமரின் செயலுக்கான காரணம் அங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீ இராமரே பரம்பொருள், பரம புருஷ பகவான் என்பதும் அங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.

இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுப்பது சரியா?

இராமரை ஏற்று கிருஷ்ணரை மறுக்கும் மக்களிடம் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை, கடவுளை மனிதனின் தளத்தில் வைத்துப் பார்ப்பதே. முழுமுதற் கடவுள் நமது விதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை உணரும்போது மட்டுமே உண்மையான இறையுணர்வு ஏற்படுகிறது.

மக்கள் தொண்டு மகேசன் தொண்டா?

“கடவுள் யார் என்று எங்களுக்குத் தெரியாது, கண்களில் தெரிந்தவர்களுக்கு தொண்டு செய்கிறோம்”–இதனை நாம் அடிக்கடி கேட்கிறோம். கடவுள் யார் என்பதையே அறியாத இவர்கள், கடவுளுக்கு எவ்வாறு தொண்டு செய்வது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில், மக்களுக்குத் தொண்டு செய்வதே மாதவனுக்கு செய்யும் தொண்டு என்று கூறுவதில் என்ன நியாயம்? மாதவன் யார் என்றே தெரியாது, ஆனால் மாதவனுடைய சேவை இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்?

Latest

- Advertisement -spot_img