- Advertisement -spot_img

CATEGORY

முழுமுதற் கடவுள்

வேண்டுவன வேண்டாமை வேண்டும்

கிருஷ்ணரின் மீது அன்பு செலுத்துவதே நமது இயற்கையான நிலை. நாம் அவர்மீது அன்பு செலுத்தினால், அவர் தம்மையே நம்மிடம் ஒப்படைத்துவிடுவார். கிருஷ்ணரே நமக்குக்

யார் முழுமுதற் கடவுள்?

கடவுளை அறிவதற்கு வேதங்களே சிறந்த வழி என்பதை முன்பு (ஜனவரி இதழில்) கண்டோம். வேதங்களின் சாரமான பகவத் கீதையில், வியாசர், திருதராஷ்டிரர் பேசும்போது த்ருதராஷ்ட்ர உவாச என்கிறார்; அர்ஜுனன் பேசுகையில் அர்ஜுன உவாச என்கிறார்; ஸஞ்ஜயன் பேசுகையில் ஸஞ்சய உவாச என்கிறார். ஆனால் கிருஷ்ணர் பேசுகையில் க்ருஷ்ண உவாச என்பதற்குப் பதிலாக, ஸ்ரீ பகவான் உவாச என்று குறிப்பிட்டுள்ளார். பகவான் என்ற சொல்லின் பொருள் என்ன? பக என்றால் “வைபவங்கள்” என்றும், வான் என்றால் “உடையவர்” என்றும் பொருள்படுவதால், பகவான் என்றால் “வைபவங்களை உடையவர்” என்று பொருள். ஸ்ரீல பராசர முனி இதனை விஷ்ணு புராணத்தில் (6.5.47) மேலும் விளக்குகிறார்:

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மறைந்த விதம்

ஸ்ரீமத் பாகவதத்திலும் இதர புராணங்களிலும் பரம புருஷ பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் எங்கு பிறந்தார் (பிறப்பார்), அவருடைய பெற்றோர் யார், அவர் நிகழ்த்திய அசாத்தியமான செயல்கள் யாவை போன்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவருடைய மறைவு பற்றி மிகக் குறைந்த தகவல்களே கொடுக்கப்பட்டுள்ளன. பகவான் இராமரும் இலக்ஷ்மணரும் சராயு நதியில் இறங்கி இவ்வுலக மக்களின் பார்வையிலிருந்து மறைந்ததாக இராமாயணம் விளக்குகின்றது. பகவான் சைதன்யரோ பூரியின் கோபிநாதர் கோவிலுள்ள கிருஷ்ண விக்ரஹத்தினுள் மறைந்ததாகக் கூறப்படுகிறது.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவோம்

மஹாராஜா பரீக்ஷித், தன் தாய் உத்தரையின் கருவறையில் இருந்தபோது, அஸ்வத்தாமன் ஏவிய பிரம்மாஸ்திரம் பெரும் சக்தியுடன் அவரை அழிக்க வந்தது. அப்போது கருணையே வடிவான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், உத்தரையின் பிரார்த்தனைக்கு உகந்து, மிகுந்த பேரொளியுடன் கருவறையில் தன்முன் தோன்றி தன்னைக் காப்பாற்றுவதை பரீக்ஷித் கண்டார். தன்னைக் காப்பாற்றிய அந்த நபர் யார் என வியந்த அவர், பிறந்த பின்னரும் அவரையே தேடிய வண்ணம் இருந்ததால், பரீக்ஷித் என்று பெயர் பெற்றார்.

நரகாசுர வதம்

பௌமாசுரன் என்னும் அசுரன், பல்வேறு மன்னர்களின் அரண்மனைகளிலிருந்து 16,000 அரச குமாரியரைக் கடத்திச் சென்று சிறைப்படுத்தியதையும், அற்புத குணங்கள் நிறைந்த முழுமுதற் கடவுள் கிருஷ்ணரால் அவன் கொல்லப் பட்டதையும் ஸ்ரீமத் பாகவதத்தில் பரீக்ஷித் மகாராஜாவிற்கு சுகதேவ கோஸ்வாமி விளக்கியுள்ளார். பொதுவாக எல்லா அசுரர்களும் தேவர்களுக்கு எதிராகவே செயல்படுவார்கள். இந்த பௌமாசுரன் மிகுந்த பலத்தைப் பெற்றபோது, வருணனின் சிம்மாசனத்திலிருந்த குடையை வலுக்கட்டாயமாகப் பிடுங்கியிருந்தான்; தேவர்களின் தாயான அதிதியின் காதணிகளை அபகரித்திருந்தான்; மேலும், ஸ்வர்க லோகத்தைச் சார்ந்த மேரு மலையின் ஒருபகுதியான மணி-பர்வதத்தையும் அவன் கைப்பற்றி யிருந்தான். எனவே, பௌமாசுரனைப் பற்றி பகவான் கிருஷ்ணரிடம் முறையிடுவதற்காக தேவராஜனான இந்திரன் துவாரகைக்கு வந்தான்.

Latest

- Advertisement -spot_img