- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

ஜீவ கோஸ்வாமி ஒரு தூய பக்தராகவும், வேத சாஸ்திரங்களில் வல்லவராகவும், பௌதிக ஆசைகளை முற்றிலும் துறந்தவராகவும் இருந்தார். இருப்பினும், ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவரை மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபடுத்தினார். சில சமயங்களில், ராதா கோவிந்த விக்ரஹ வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தல், மலர்மாலை தொடுத்தல், இடங்களை சுத்தம் செய்தல், ரூப கோஸ்வாமியின் பாத கமலங்களை பிடித்துவிடுதல், எழுதுவதற்காக ஆலிலைகளை ஏற்பாடு செய்தல், எழுதுகோல் (எழுத்தாணி) செய்தல் போன்ற பல சேவைகளில் ஜீவர் ஈடுபட்டார்.

நாமாசாரியர்

நாமாசாரியர் என்னும் சமஸ்கிருத சொல், நாம, ஆசாரியர் என்னும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். நாம என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தைக் குறிக்கும். ஆசாரியர் என்றால் தன்னுடைய நன்னடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு போதிப்பவர் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தை தானும் உச்சரித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவரை நாமாசாரியர் என்று அழைக்கலாம். பகவான் சைதன்யர் தனது முக்கியமான சீடர்களில் ஒருவரான ஹரிதாஸ தாகூருக்கு இப்பட்டத்தைச் சூட்டி கௌரவித்தார்.

Latest

- Advertisement -spot_img