- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை எடுத்துரைக்கும் புகழ்பெற்ற நூலான ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியருடைய வாழ்க்கை வரலாற்றைக் காண்போம். வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ...

மஹாபிரபுவின் விருந்தாவன யாத்திரை

மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.

மஹாபிரபுவின் மகத்துவ லீலைகள்

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையில் சாதுர்மாஸ்ய காலத்தில் நான்கு மாதங்கள் திருவரங்கத்தில் தங்கியிருந்த காலம் அது. அவர் நாள்தோறும் காவிரியில் நீராடி அரங்கனை தரிசித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடுவார். அவரது திருமேனியின் அழகையும் பரவசத்தையும் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைக் காண்பதற்காகவும் அவருடன் இணைந்து ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் பாடுவதற்காகவும் திருவரங்கத்தில் கூடினர்.

மனித சமுதாயத்திற்கான சைதன்ய மஹாபிரபுவின் திருப்பணி

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் தானே தன்னுடைய சொந்த பக்தராக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உருவில் தோன்றினார். அவருடைய வாழ்க்கையையும் உபதேசங்களையும் சுமார் 400 வருடங்களுக்கு முன்பாக ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் நூலில் பதிவு செய்தார்.

சைதன்யரின் ஆரம்பகால லீலைகள்

சைதன்ய மஹாபிரபுவின் முக்கியமான உபதேசம், அனைவரும் கிருஷ்ண உணர்வை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்பதும், ஹரியின் நாமத்தில் அனைத்து மங்களங்களும் அடங்கி உள்ளது என்பதுமாகும். சைதன்ய மஹா பிரபுவின் போதனைகளை உலக மக்களுக்கு பாகுபாடின்றி எடுத்துரைத்தவர் தெய்வத்திரு. அ.ச. பக்திவேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர். தனது திருநாமம் உலகின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பரவும் என்று சைதன்ய மஹாபிரபு முன்னரே கூறியிருந்தார்; அக்கூற்றினை ஸ்ரீல பிரபுபாதர் நிறைவேற்றினார்.

Latest

- Advertisement -spot_img