இராமரை கற்பனை நாயகனாகக் கூறுவோர் முன்வைக்கும் வாதம்: “இராமாயணமே கற்பனை காவியம் என்பதால், அதன் நாயகனும் கற்பனையே. இராமாயணத்தின் பல சம்பவங்கள் இடத்திற்கு இடம் வேறுபடுவதால் இராமாயணத்தை கற்பனை என்றே கருதுகிறோம். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத விஷயங்கள் இதர மொழி இராமாயணங்களில் காணப்படுகின்றன. வால்மீகியின் கதைக்கும் மற்றவர்களின் கதைக்கும் ஆங்காங்கே வேறுபாடு உள்ளது. இராமாயணம் ஒரு வரலாறு என்றால், ஒரே சம்பவத்தை பல எழுத்தாளர்கள் எப்படி பலவாறு எழுதியிருப்பர்?”
கிருஷ்ணர் என்றாலே அனைவரின் மனதிலும் உடனடியாக ராதையின் நினைவும் வருகிறது. ராதையும் கிருஷ்ணரும் பிரிக்க முடியாதவர்கள். கிருஷ்ண பக்தர்களில் அவரின் காதலியர்களாக விருந்தாவனத்தில் வசித்த கோபியர்களே தலைசிறந்தவர்கள் என்பதையும் அந்த கோபியர்களின் மத்தியில் ஸ்ரீமதி ராதாராணியே உயர்ந்தவள் என்பதையும் பலரும் அறிவர். அதே சமயத்தில், கிருஷ்ண லீலைகளை விரிவாக எடுத்துரைக்கும் ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் இல்லாதது ஏன் என்பது சில பக்தர்களின் மனதில் வருத்தத்தையும், வேறு சிலரின் மனதில், “ஸ்ரீமதி ராதாராணியே தலைசிறந்த பக்தை என்பது சரியா?” என்ற ஐயத்தையும் ஏற்படுத்தலாம். அதற்கு விளக்கமளிக்க முயல்வோம்.
கிருஷ்ண பக்தியைப் பயிலுதல், பகவத் கீதையைப் படித்தல், இஸ்கான் இயக்கத்தில் தீவிரமாக பங்குகொள்ளுதல் முதலிய ஆன்மீகச் செயல்கள் அனைத்தும் சமுதாய நிலைகளுக்கு அப்பாற்பட்டவை. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், இந்து, முஸ்லீம், கிறிஸ்துவன் முதலியவை மட்டுமின்றி, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவியாக இருப்பவர்கள் என எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைவரும் கிருஷ்ண பக்தியில் பங்கேற்கலாம்.
பகவத் கீதை அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது. அர்ஜுனன் ஒரு துறவியா என்ன! உண்மையைச் சொல்லப்போனால், பகவத் கீதையைக் கேட்பதற்கு முன்பாக அர்ஜுனன் துறவறம் பூண்டு கானகம் செல்ல விரும்பினான். ஆனால் கீதையைக் கேட்ட பின்னர், கிருஷ்ணரது அறிவுரையின்படி போரிட ஒப்புக் கொண்டான். அவ்வாறு இருக்கையில் கீதையைப் படித்தால் சந்நியாசியாகி விடுவார்கள் என்று சிலர் கூறுவதில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா?