- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

தமிழில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் பிரம்மாண்ட வெளியீட்டு விழா

காலையில் ஸ்ரீல பிரபுபாதருக்கு குரு பூஜை முடிந்தவுடன், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் பிரதிகள் முதலில் ஸ்ரீல பிரபுபாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டன. தவத்திரு பானு ஸ்வாமி, தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி, திரு முரளி பட்டர், திரு ராதே ஷ்யாம் தாஸ், திரு சுமித்ர கிருஷ்ண தாஸ், திரு ருக்மிஹா தாஸ், திரு ஸ்ரீ கிரிதாரி தாஸ், திரு ஸத்ய நாராயண தாஸ் ஆகியோர் நூலை ஸ்ரீல பிரபுபாதருக்கு முதலில் அர்ப்பணித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீஸ்ரீ கௌர நிதாய், ஸ்ரீஸ்ரீ ராதா-கிருஷ்ணர், ஸ்ரீஸ்ரீ ஜகந்நாத-பலதேவ-சுபத்திரை ஆகியோருக்கும் நூல் அர்ப்பணிக்கப்பட்டது.

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் தமிழில் உருவான விதம்

ஸ்ரீ கிருஷ்ண தாஸ கவிராஜரால் 400 ஆண்டுகளுக்கு முன்பு வங்காளத்தில் வெளியிடப்பட்டு, ஸ்ரீல பிரபுபாதரால் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் மாபெரும் காவியம் தமிழில் தற்போது வெளிவந்துள்ளதால் பக்தர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பதை அறிகிறோம். இத்தருணத்தில், இந்த தமிழ் நூல் எவ்வாறு உருவாகியது என்பதுகுறித்த முக்கிய தகவல்களை பகவத் தரிசன வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்

ஸ்ரீ சைதன்யரை அறிதல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்பவர் யார்? இவரை பெரும்பாலானோர் உயர்ந்த பக்தராகவும் ஒரு சந்நியாசியாகவும் காண்கின்றனர். ஆனால் இவரை நெருக்கமாக அறிந்த உயர்ந்த பக்தர்களோ, சாக்ஷாத் முழுமுதற் கடவுள் கிருஷ்ணராக இவரை அறிகின்றனர். அதுமட்டுமின்றி, ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்துடன் பக்த ரூபத்தில் தோன்றியவராகவும் அறிகின்றனர். சிலர் இதில் ஐயம் கொள்கின்றனர், ஏற்க மறுக்கின்றனர், பல்வேறு வினாக்களை எழுப்புகின்றனர். அவர்களுக்கான பதிலே இக்கட்டுரை.

ரகுநாத தாஸரின் சரணாகதியும் நாய்க்குக் கிடைத்த முக்தியும்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு காசியிலிருந்து புரிக்குத் திரும்ப ஆவல் கொண்டார். ஸநாதன கோஸ்வாமியிடம் விருந்தாவனத்திலுள்ள ரூபர் மற்றும் அனுபமருடன் இணையும்படியும், வைஷ்ணவ நடத்தையைப் பற்றி ஒரு நூலினை எழுதும்படியும், விருந்தாவனப் பகுதிகளில் கிருஷ்ணரின் லீலைகள் நடைபெற்ற இடங்களைக் கண்டுபிடித்துப் புதுப்பிக்கும்படியும், கிருஷ்ண உணர்வைப் பரப்புவதற்கு வாழ்வை அர்ப்பணிக்கும்படியும், விருந்தாவனத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பார்த்துக்கொள்ளும்படியும் மஹாபிரபு அறிவுறுத்தினார்.

அமிர்தம் பருக வாரீர்!

பகவான் ஸ்ரீ சைதன்யரின் அவதாரம், அவரது போதனைகள், பக்தர்களுடன் அவர் புரிந்த லீலைகள் முதலியவற்றை அதிகாரபூர்வமான வேத சாஸ்திர பிரமாணங்களோடு வழங்கும் உன்னதப் படைப்பே ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் என்னும் தலைப்பிற்கு அமரத்துவத்தில் உயிர்சக்தியின் இயல்புகள்” என்று ஸ்ரீல பிரபுபாதர் பொருள் கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் பக்த ரூபத்தில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து அனைத்து ஜீவராசிகளுடனும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் புரிந்து யுக தர்மத்தை நிலைநாட்டினார்.

Latest

- Advertisement -spot_img