பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரிக்கும்போது எப்போதும் அவருடன் பகவான் பலராமரும் அவதரிப்பது வழக்கம். அதன்படி, அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக பக்தரின் வடிவில் அவதரித்தபோது பகவான் பலராமரும் பக்தரின் வடிவில் ஸ்ரீ நித்யானந்த பிரபுவாகத் தோன்றினார். கருணையின் அவதாரமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காட்டிலும் ஸ்ரீ நித்யானந்த பிரபு அதிக கருணை வாய்ந்தவராகத் திகழ்ந்து, கலி யுகத்தின் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களை விடுவிக்கின்றார். நித்யானந்த பிரபுவின் அவதாரத் திருநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவரைப் புகழ்ந்து லோசன தாஸ தாகூர் எழுதியுள்ள பல்வேறு பாடல்களிலிருந்து ஒரு பாடலை பகவத் தரிசன வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
கடந்த சில வருடங்களாக பல்வேறு பொய்யான தகவல்கள் இந்தியாவில் வாட்ஸ்ஆப் முதலிய செயலிகளின் மூலம் விரைவாகப் பரவி, மக்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துள்ளன. அவற்றில் ஒன்று: ஜெர்ஸி பசு உட்பட மேற்கத்திய நாட்டின் பசுக்கள் உண்மையான பசுக்கள் அல்ல, அவை பன்றியையும் எருமையையும் சேர்த்து கொண்டு வரப்பட்ட கலப்பினம். இந்தக் கூற்று எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் முற்றிலும் அபத்தமானது என்றபோதிலும், பல்வேறு இந்தியர்கள் இதனை நம்புகின்றனர்.
பகவானை மறந்து பௌதிக உலகினுள் வாழும் ஜீவன் தனது ஒவ்வொரு பிறவியிலும் வாழ்க்கையை வீணடிக்கின்றான். அவ்வாறு வாழ்ந்தவன் ஏதோ நல்லதிர்ஷ்டத்தினால் பகவானிடம் சரணடைவதற்கான வாய்ப்பினைப் பெற்றால், அவன் அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துரைக்கும் விதமாக, ஒரு சாதாரண கட்டுண்ட ஆத்மாவின் நிலையில் தம்மை நிறுத்திய பக்திவினோத தாகூர் இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார். மனித வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை இப்பாடல் நன்கு உணரச் செய்கிறது.